முதலமைச்சர் ஜெயலலிதா மிதுன லக்கினம் , சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களுக்கு தற்போது குரு தசை சனி புத்தி நடைபெற்று வருகிறது.
தசா புத்தி
2. நடக்கும் சனி புத்தியில், 8ம் அதிபதியான சனி மாரக ஸ்தானமான 2ம் பாவத்தில்
3. தசா நாதன் குரு இன்னொரு மாரக ஸ்தானமான 7ம் பாவத்தில்
கோச்சாரம்
சந்திரன் சூரியனின் நேரடி பார்வையில் பௌர்ணமி யோகத்திலும் ,
குருவின் 9ம் பார்வையில் குரு சந்திர யோகத்தால் மிகவும் வலிமை அடைந்திருப்பதால் , கோச்சார கிரக சுழற்சி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது கோச்சாரப்படி பார்த்தாலும்
1. குரு பார்வை இல்லாத அர்த்தாஷ்டம சனி
2. புரட்டாசி முடிந்து ஐப்பசியில் ராசி அதிபதி சூரியன் நீச்சம் அடைவதும், கார்த்திகையில் சனியுடனும் சேர்நதும் வலிமை இழக்கிறார்
3. ராசிக்கு 2, 8 குடைய புதன் , குரு மாரக ஸ்தானமான 2ம் இடத்தில
இந்த காரணங்களினால் அவர் மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு
செயற்கை சுவாசம் பொறுத்த பட்டு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் !
தசா புத்தியும், கோச்சாரம் இரண்டுமே சரி இல்லை ! 2017 ஏப்ரல் மாதம் வரை சனி புத்தியும் , பிப்ரவரி வரை குரு பார்வை இல்லாத அர்த்தாஷ்டம சனியும் தொடர்வதால் அபாயமான கட்டத்தை இன்னும் அவர் தாண்ட வில்லை என்பதை அவரது கட்டம் சொல்கிறது !
தமிழ்நாட்டின் ஜாதகம்
தமிழ்நாடு , குறிப்பாக சென்னை மாகாணம் மேஷ ராசி என்று ஞானிகளால் அடையாளம் காட்டப்படுகின்றது ! அந்த வகையில் பார்த்தால் மேஷ ராசிக்கு அஷ்டம சனியும் , குரு பெயர்ச்சி 6ம் இடத்தில ருண , ரோக, சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார் !
இதனால் தலைமை செயலகம் அமைந்துள்ள சென்னை ஏதாவது ஒரு வகையில் பாதிப்பை சந்திக்க வேண்டும். ஸ்திர தன்மை இல்லாத நிர்வாகம் , பொருளாதார சரிவு ஏற்பட வேண்டும் என்பது விதி. நிர்வாகம் மீண்டும் சீர் ஆவதற்கு அஷ்டம சனி முடிந்து அடுத்த குரு பெயர்ச்சி வரை பொறுத்து இருக்க வேண்டும் என்று எடுத்து காட்டுகிறது !
எது எப்படி இருந்தாலும் , கண்ணதாசன் எழுதிய வரிகளை போல , முடிவு என்பது நம்மை படைத்த பரம்பொருளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ! பொறுத்திருந்து பிரார்த்திப்போம் !
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
குறிப்பு - பணத்துக்காக ஜோதிடம் பார்க்கும் ஜோதிடன் நான் இல்லை. அதனால், எதையும் கூட்டியோ குறைத்தோ சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. உள்ளதை உள்ளபடி எழுதி இருக்கிறேன்.
யார் மனதெனும் புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன்.