copyprotect

Friday, August 5, 2016

கோச்சாரமா அல்லது தசை புத்தியா ?


கோச்சாரம் என்றால் பிறந்த நேரத்தில் சந்திரன் நின்ற ராசியை அடிப்படையாக வைத்து, கிரகங்கள் இன்றைய நிலையில் எப்படி சுழல்கிறது என்பது வாகும்.

தசை புத்தி என்பது , பிறந்த நட்சத்திரை வைத்து 120 வருடங்களுக்கு எழுதப்பட்டு  விடும். உதாரணமாக சுக்கிரன் 20 வருடமும் , குரு 16 வருடமும் தசை நடத்துவார்கள்.


சரி , இப்பொழுது எது சரி ? எதை நாம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்பது கேள்வி ! கோச்சாரத்தை கணக்கில் எடுத்து கொள்ள தேவை இல்லை என்று யாராவது கூறினால் அவர்களுக்கு ஒரே கேள்வி,  சந்திராஷ்டமத்தை கணக்கில் நீங்கள் எடுத்து கொண்டால் , குரு பெயர்ச்சி , சனி பெயர்ச்சியையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் !

சந்திரன் கோச்சரத்தில் எட்டில் வரும் பொழுது மனம் தடுமாறுகிறது , புத்தி வேலை செய்ய மறுக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை ! சந்திரன் 2.5 நாட்களில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் , குரு , சனி வருட கிரஹங்கள். அது தான் வித்தியாசம்!

கோச்சார பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும் , ராசிக்கு மறையாமல் , கேந்திர திரிகோணங்களில் கிரஹங்கள் பெயர்ச்சி ஆவதை பொருத்தும் , மறைவிடமான 6, 8, 12 இடங்கள்,  தன லாப ஸ்தனங்களான 2, 11 இடங்களை பொருத்தும் மாறுபடும் !



























No comments:

Post a Comment