copyprotect

Saturday, August 6, 2016

மக்களின் எதிர்பார்ப்பு !


பொதுவாக ஜோதிடர்கள் நமக்கு நல்ல பலனை மட்டுமே சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம் ! கொஞ்சம் Negative ஆக சொன்ன கூட , இந்த ஜோதிடர் சரி இல்லை , வேறு ஒருவரிடம் பார்க்கலாம் என்று சொல்லு வார்கள் ! ஜோதிடரின் இடத்தில் இருந்து பார்த்தால் , கத்தி மேல் நடப்பது மாதிரி தான் !!

உதாரணத்திற்கு , 6இல் சனி ராகு இருப்பதால் , எதிரிகளை எளிதாக வெல்ல முடியும் , எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்று சொன்னால் , அதை தவறாக புரிந்து கொண்டு, வேலை பார்க்கும் இடத்தில மேலதிகாரர்களிடம் சண்டை போடுவது , ரோட்டில் போறவனிடம் வம்பு இழுப்பது என்று எதிரிகளை அவர்களே உருவாக்கி கொண்டால் அதற்கு ஜோதிடன் என்ன செய்ய முடியும் !

அதே போல , இன்னொரு உதாரணம். ராசிக்கோ , லக்கினத்துக்கோ 2, 7, 8 இல் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கும் பட்சத்தில் , தோஷம் இருக்கு, தாமத திருமணம் என்று சொன்னால் , உடனே வாழ்க்கையே முடிந்து விட்டது போல , கன்னத்தில் கை வைத்து கொண்டு உக்காந்து விடுவார்கள் !

நன்கு ஜோதிட ஞானம் பெற்றவர்கள், சில விடயங்களை , இலை மறை காயாக தான் சொல்வார்கள் , அதை ஜாதகர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் ! ஏன் என்றால் , ஒரு நல்ல ஜோதிடனுக்கு அழகு , ஜாதகனுக்கு தேவையான ஊக்கம் அளித்து, அவனை நல் வழிப்பாதையில் அழைத்து செல்ல வேண்டும் ! Demotivate செய்ய கூடாது !


தோஷம் உள்ள ஜாதகர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்ன வென்றால் - முற் பிறவிகளில் நாம் செய்த பாவ மூட்டைகளை சுமந்து கொண்டு தான் இந்த பிறவி எடுத்து இருக்கிறோம். இது நாம் செய்த கர்மா,  அதை நாம் கழித்தே ஆக வேண்டும் ! தொடர் தோல்விகளையும் , அவமானங்களையும் , துயரங்களையும், தாங்கி கொள்ள முடியாமல் , வாழ்வை பாதியிலே முடித்து கொள்பவர்களும் உண்டு !! அவர்களை சொல்லி குற்றமில்லை , கிரகங்கள் ஆட்டி படைக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும் , அந்த பாவமும் சேர்ந்து அடுத்த பிறவியில் இன்னும் கடுமையான சோதனைகளை கடக்க வேண்டியிருக்கும் ! நாம் வாங்கி வந்த வரம் அவ்வளவு தான் என்பதை ஏற்று கொண்டு , மனதை தேற்றி கொண்டு, இறைவன் மீது பாரத்தை போட்டு விட்டு முன்னேறி செல்ல வேண்டும் !


12இல் கேது இருக்க பிறந்தவர்களுக்கு, அடுத்த பிறவி கிடையாது , பிறவி பெருங்கடல் நீந்தி வந்து விட்டார்கள் என்று சொல்வது உண்டு !
அது போல , உலகமே நாடக மேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள் என்ற சொல்லும் உண்டு !


Life is a game and you will have to complete till the end. If you discontinue in the middle, then you will again have to start back from Level 1 !!


-----------------------------------------------------------------------------------------------------------------------


Good inspirational song from Kannadasan just struck in my mind -


வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால் த்ன்னை மறந்தே வாழலாம்

வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணியாக அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவர் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம்

வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்





No comments:

Post a Comment