ராசிகளை சர , ஸ்திர , உபய ராசிகளாக பிரிக்கலாம்
சர ராசி - மேஷம் , கடகம் , துலாம் , மகரம்
ஸ்திர ராசி - ரிஷபம் , சிம்மம் , விருச்சிகம் , கும்பம்
உபய ராசி - மிதுனம், கன்னி , தனுசு , மீனம்
இப்பொழுது இந்த வகை ராசிகளுடைய குண நலன்களை பார்க்கலாம்.
சர ராசி - தலைமை பண்பு , வேகம் , வளைந்து கொடுத்தல், சுதந்திர எண்ணம் , இடத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்ளுதல் , மற்றவர்களிடம் எளிதாக காரியம் சாதித்து கொள்ளுதல், இலக்கு மட்டுமே குறி , மன்னிக்கும் குணம்
ஸ்திர ராசி - ஸ்திர தன்மை , பிடிவாதம் , தலைக்கனம் , வேகம் இல்லா விவேகம் , அமைதி , இடத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்ள முடியாமல் தவித்தல், கருத்துக்களை மாற்றி கொள்ளாத நிலை , கடும் கோபம் , எதிரிகளை மன்னிக்காத குணம், கசப்பான சம்பவங்களை மறக்க முடியாத நிலை, வளைந்து கொடுத்த போக தெரியாத நிலை
உபய ராசி - சாந்தம் , அமைதி , கூச்சம் , திறந்த மனது , படித்து கொண்டே இருத்தல் , ஆராய்ச்சி எண்ணம் , பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்தல் , ஆன்மீக ஈடுபாடு , தத்துவ நிலை , பொன் பொருள் நாட்டமின்மை, மன்னிக்கும் குணம் , மறதி, இருவித எண்ணங்கள் , தடுமாற்றம்
இது தவிர , பொதுவாக , சர ராசிகள் அரசியலுக்கு ஏற்ற ராசிகள் என்றும் , ஸ்திர ராசிகள் கலைத்துறைக்கு ஏற்ற ராசிகளாகவும், உபய ராசி ஆராய்ச்சி படிப்பு , வேலைக்கு ஏற்ற ராசிகளாகவும் கூறப்படுவது உண்டு!
copyprotect
Thursday, August 11, 2016
ஆண் ராசி / பெண் ராசி
ஆண் ராசிகள் -
மேஷம் , மிதுனம் , சிம்மம் , துலாம் , தனுசு, கும்பம்
ஆண் ராசிகளின் இயல்பு -
வெளிப்படை தன்மை , எதிரிகளை அழிக்கும் எண்ணம், ஆதிக்கம் செலுத்துதல் , சகஜமான பேச்சு ஆகிய சிலவற்றை கூறலாம்.
பெண் ராசிகள் -
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் , மீனம்
பெண் ராசிகளின் இயல்பு -
அமைதி , பராமரித்தல் , பாதுகாத்தல் , மனதில் உள்ளதை வெளிப்படுத்தாத இயல்பு , உணர்ச்சிவயப்படுத்தல் ஆகிய சிலவற்றை கூறலாம்.
பொதுவான குண நலன்களை தவிர , கிரகங்கள் ஆண் , பெண் ராசிகளில் இருப்பதை வைத்து , பிறக்க போகும் குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்பதை ஜோதிடர்கள் உபயோகிக்கும் பல வழிகளில் இதுவும் ஒன்று !
மேஷம் , மிதுனம் , சிம்மம் , துலாம் , தனுசு, கும்பம்
ஆண் ராசிகளின் இயல்பு -
வெளிப்படை தன்மை , எதிரிகளை அழிக்கும் எண்ணம், ஆதிக்கம் செலுத்துதல் , சகஜமான பேச்சு ஆகிய சிலவற்றை கூறலாம்.
பெண் ராசிகள் -
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் , மீனம்
பெண் ராசிகளின் இயல்பு -
அமைதி , பராமரித்தல் , பாதுகாத்தல் , மனதில் உள்ளதை வெளிப்படுத்தாத இயல்பு , உணர்ச்சிவயப்படுத்தல் ஆகிய சிலவற்றை கூறலாம்.
பொதுவான குண நலன்களை தவிர , கிரகங்கள் ஆண் , பெண் ராசிகளில் இருப்பதை வைத்து , பிறக்க போகும் குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்பதை ஜோதிடர்கள் உபயோகிக்கும் பல வழிகளில் இதுவும் ஒன்று !
நட்பு கிரகங்கள்
கிரகங்களை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. சூரியன் , சந்திரன் , குரு , செவ்வாய் ஒருவருக்கு ஒருவர் நட்பு கிரகங்கள். கேது செவ்வாயை போல் பலன் கொடுப்பவர் என்பதால் இந்த பிரிவில் சேர்க்கலாம் (தகவலுக்காக மட்டும்).
2. சுக்கிரன், சனி , புதன் ஒருவருக்கு ஒருவர் நட்பு கிரகங்கள். ராகு சனியை போல் பலன் கொடுப்பவர் என்பதால் இந்த பிரிவில் சேர்க்கலாம் (தகவலுக்காக மட்டும்).
சரி, இந்த கிரகங்கள் ஒருவருக்கு ஒருவர் நட்பாக இருப்பதற்கு என்ன காரணம் ?
ஒருவருக்கு மற்றொருவர் கேந்திர , திரிகோண யோகாதிபதிகள் என்ற காரணம் இருந்தாலும், உண்மையான காரணம் , ஒரு பிரிவில் உள்ள ராசி அனைத்தும் நீர், நெருப்பு Combinationஇல் வரும் ராசிகள் ! மற்றொரு பிரிவு , மண் காற்று Combinationஇல் வரும் ராசிகள் !
உதாரணத்திற்க்கு , செவ்வாயை எடுத்து கொண்டால் , மேஷ ராசி நெருப்பு ராசி, விருச்சிகம் நீர் ராசி. அதே போல , சுக்கிரனை எடுத்து கொண்டால் ரிஷபம் மண் , துலாம் காற்று ராசிகள்.
எந்த எந்த ராசிகள் என்ன வகையை சேர்ந்தது என்பதை கீழே கொடுத்து உள்ளேன் !
நெருப்பு - மேஷம் , சிம்மம் , தனுசு
மண் - ரிஷபம் , கன்னி , மகரம்
காற்று - மிதுனம் , துலாம் , கும்பம்
நீர் - கடகம் , விருச்சிகம் , மீனம்
நெருப்பு , மண், காற்று , நீர் ராசிகளை பற்றியும் , ஒவ்வொரு ராசியின் இயல்பு , குணநலன்களை பற்றியும் அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம் !!
Saturday, August 6, 2016
மக்களின் எதிர்பார்ப்பு !
பொதுவாக ஜோதிடர்கள் நமக்கு நல்ல பலனை மட்டுமே சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம் ! கொஞ்சம் Negative ஆக சொன்ன கூட , இந்த ஜோதிடர் சரி இல்லை , வேறு ஒருவரிடம் பார்க்கலாம் என்று சொல்லு வார்கள் ! ஜோதிடரின் இடத்தில் இருந்து பார்த்தால் , கத்தி மேல் நடப்பது மாதிரி தான் !!
உதாரணத்திற்கு , 6இல் சனி ராகு இருப்பதால் , எதிரிகளை எளிதாக வெல்ல முடியும் , எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்று சொன்னால் , அதை தவறாக புரிந்து கொண்டு, வேலை பார்க்கும் இடத்தில மேலதிகாரர்களிடம் சண்டை போடுவது , ரோட்டில் போறவனிடம் வம்பு இழுப்பது என்று எதிரிகளை அவர்களே உருவாக்கி கொண்டால் அதற்கு ஜோதிடன் என்ன செய்ய முடியும் !
அதே போல , இன்னொரு உதாரணம். ராசிக்கோ , லக்கினத்துக்கோ 2, 7, 8 இல் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கும் பட்சத்தில் , தோஷம் இருக்கு, தாமத திருமணம் என்று சொன்னால் , உடனே வாழ்க்கையே முடிந்து விட்டது போல , கன்னத்தில் கை வைத்து கொண்டு உக்காந்து விடுவார்கள் !
நன்கு ஜோதிட ஞானம் பெற்றவர்கள், சில விடயங்களை , இலை மறை காயாக தான் சொல்வார்கள் , அதை ஜாதகர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் ! ஏன் என்றால் , ஒரு நல்ல ஜோதிடனுக்கு அழகு , ஜாதகனுக்கு தேவையான ஊக்கம் அளித்து, அவனை நல் வழிப்பாதையில் அழைத்து செல்ல வேண்டும் ! Demotivate செய்ய கூடாது !
தோஷம் உள்ள ஜாதகர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்ன வென்றால் - முற் பிறவிகளில் நாம் செய்த பாவ மூட்டைகளை சுமந்து கொண்டு தான் இந்த பிறவி எடுத்து இருக்கிறோம். இது நாம் செய்த கர்மா, அதை நாம் கழித்தே ஆக வேண்டும் ! தொடர் தோல்விகளையும் , அவமானங்களையும் , துயரங்களையும், தாங்கி கொள்ள முடியாமல் , வாழ்வை பாதியிலே முடித்து கொள்பவர்களும் உண்டு !! அவர்களை சொல்லி குற்றமில்லை , கிரகங்கள் ஆட்டி படைக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும் , அந்த பாவமும் சேர்ந்து அடுத்த பிறவியில் இன்னும் கடுமையான சோதனைகளை கடக்க வேண்டியிருக்கும் ! நாம் வாங்கி வந்த வரம் அவ்வளவு தான் என்பதை ஏற்று கொண்டு , மனதை தேற்றி கொண்டு, இறைவன் மீது பாரத்தை போட்டு விட்டு முன்னேறி செல்ல வேண்டும் !
12இல் கேது இருக்க பிறந்தவர்களுக்கு, அடுத்த பிறவி கிடையாது , பிறவி பெருங்கடல் நீந்தி வந்து விட்டார்கள் என்று சொல்வது உண்டு !
அது போல , உலகமே நாடக மேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள் என்ற சொல்லும் உண்டு !
Life is a game and you will have to complete till the end. If you discontinue in the middle, then you will again have to start back from Level 1 !!
-----------------------------------------------------------------------------------------------------------------------
Good inspirational song from Kannadasan just struck in my mind -
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்
காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால் த்ன்னை மறந்தே வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால் த்ன்னை மறந்தே வாழலாம்
வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணியாக அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்
ஆழக்கடலில் தோணியாக அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவர் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம்
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவர் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம்
வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்
காத்திருக்கப் பழகு !!
பசிக்கும் வரை காத்திரு
உடல் நீர் கேட்கும் வரை காத்திரு
காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு
சளி வெளியேரும் வரை காத்திரு
உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு
உலையில் அரிசி வேகும் வரை காத்திரு
பயிர் விளையும் வரை காத்திரு
கனி கனியும் வரை காத்திரு
மரம் மரமாகும் வரை காத்திரு
தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு
தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு
துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு
தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு
உணவு தயாராகும் வரை காத்திரு
"இது உன்னுடைய வாழ்க்கை"
"ஓட்டப்பந்தயம் அல்ல"
ஒடாதே
நில்
விழி
பார்
தேடு
ரசி
சுவை
உணர்
பேசு
பழகு
விரும்பு
உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததனாலேயே,
உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.
உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் நிர்ப்பந்திக்கப்படுகிறது.
அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.
"நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்"
காத்திருக்கப் பழகு....
வாழப்பழகுவாய் !!
Inspiration Quote 1
- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்
வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.
மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
நான் வாழை அல்ல...! சவுக்குமரம்....
Always think positive👍👍
வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.
மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
நான் வாழை அல்ல...! சவுக்குமரம்....
Always think positive👍👍
Friday, August 5, 2016
கோச்சாரமா அல்லது தசை புத்தியா ?
கோச்சாரம் என்றால் பிறந்த நேரத்தில் சந்திரன் நின்ற ராசியை அடிப்படையாக வைத்து, கிரகங்கள் இன்றைய நிலையில் எப்படி சுழல்கிறது என்பது வாகும்.
தசை புத்தி என்பது , பிறந்த நட்சத்திரை வைத்து 120 வருடங்களுக்கு எழுதப்பட்டு விடும். உதாரணமாக சுக்கிரன் 20 வருடமும் , குரு 16 வருடமும் தசை நடத்துவார்கள்.
சரி , இப்பொழுது எது சரி ? எதை நாம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்பது கேள்வி ! கோச்சாரத்தை கணக்கில் எடுத்து கொள்ள தேவை இல்லை என்று யாராவது கூறினால் அவர்களுக்கு ஒரே கேள்வி, சந்திராஷ்டமத்தை கணக்கில் நீங்கள் எடுத்து கொண்டால் , குரு பெயர்ச்சி , சனி பெயர்ச்சியையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் !
சந்திரன் கோச்சரத்தில் எட்டில் வரும் பொழுது மனம் தடுமாறுகிறது , புத்தி வேலை செய்ய மறுக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை ! சந்திரன் 2.5 நாட்களில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் , குரு , சனி வருட கிரஹங்கள். அது தான் வித்தியாசம்!
கோச்சார பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும் , ராசிக்கு மறையாமல் , கேந்திர திரிகோணங்களில் கிரஹங்கள் பெயர்ச்சி ஆவதை பொருத்தும் , மறைவிடமான 6, 8, 12 இடங்கள், தன லாப ஸ்தனங்களான 2, 11 இடங்களை பொருத்தும் மாறுபடும் !
Subscribe to:
Posts (Atom)