copyprotect
Sunday, September 18, 2016
Friday, September 16, 2016
Monday, September 5, 2016
கற்பக விநாயகர் - கண்ணதாசனின் அனுபவம் !!

அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை!
பிள்ளையார் பட்டி என்னும்
பேரருள் சுரங்கத்தின் கண்
உள்ளவன் மலையில் பூத்த
உருவத்தின் இயற்கைத் தோன்றல்
தெள்ளிய மனத்தர்க்கு எல்லாம்
திருவருள் வழங்கும் தெய்வம்
கள்ளமில் பக்தர் தந்தை
கற்பக மூர்த்தி போற்றி!
- கவியரசர் கண்ணதாசன்
பிள்ளையார்பட்டியில் மட்டுமே நடக்கும் சூர சம்ஹாரம் வீடியோ கீழே !
-----------------------------------------------------------------------------------------------------------------------
Note : இரண்டு மாதமாக உடல் நிலை சரி இல்லாததால் தொடர்ந்து எழுத முடியவில்லை ! இப்பொழுது சற்று தேறி வருகிறேன் ! நேரம் கிடைக்கும் போது எல்லாம் பதிவிடுகிறேன் !!
-----------------------------------------------------------------------------------------------------------------------
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!
சரணே! சரணே!
-- ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு)
Thursday, August 11, 2016
சர , ஸ்திர , உபய ராசிகள்
ராசிகளை சர , ஸ்திர , உபய ராசிகளாக பிரிக்கலாம்
சர ராசி - மேஷம் , கடகம் , துலாம் , மகரம்
ஸ்திர ராசி - ரிஷபம் , சிம்மம் , விருச்சிகம் , கும்பம்
உபய ராசி - மிதுனம், கன்னி , தனுசு , மீனம்
இப்பொழுது இந்த வகை ராசிகளுடைய குண நலன்களை பார்க்கலாம்.
சர ராசி - தலைமை பண்பு , வேகம் , வளைந்து கொடுத்தல், சுதந்திர எண்ணம் , இடத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்ளுதல் , மற்றவர்களிடம் எளிதாக காரியம் சாதித்து கொள்ளுதல், இலக்கு மட்டுமே குறி , மன்னிக்கும் குணம்
ஸ்திர ராசி - ஸ்திர தன்மை , பிடிவாதம் , தலைக்கனம் , வேகம் இல்லா விவேகம் , அமைதி , இடத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்ள முடியாமல் தவித்தல், கருத்துக்களை மாற்றி கொள்ளாத நிலை , கடும் கோபம் , எதிரிகளை மன்னிக்காத குணம், கசப்பான சம்பவங்களை மறக்க முடியாத நிலை, வளைந்து கொடுத்த போக தெரியாத நிலை
உபய ராசி - சாந்தம் , அமைதி , கூச்சம் , திறந்த மனது , படித்து கொண்டே இருத்தல் , ஆராய்ச்சி எண்ணம் , பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்தல் , ஆன்மீக ஈடுபாடு , தத்துவ நிலை , பொன் பொருள் நாட்டமின்மை, மன்னிக்கும் குணம் , மறதி, இருவித எண்ணங்கள் , தடுமாற்றம்
இது தவிர , பொதுவாக , சர ராசிகள் அரசியலுக்கு ஏற்ற ராசிகள் என்றும் , ஸ்திர ராசிகள் கலைத்துறைக்கு ஏற்ற ராசிகளாகவும், உபய ராசி ஆராய்ச்சி படிப்பு , வேலைக்கு ஏற்ற ராசிகளாகவும் கூறப்படுவது உண்டு!
சர ராசி - மேஷம் , கடகம் , துலாம் , மகரம்
ஸ்திர ராசி - ரிஷபம் , சிம்மம் , விருச்சிகம் , கும்பம்
உபய ராசி - மிதுனம், கன்னி , தனுசு , மீனம்
இப்பொழுது இந்த வகை ராசிகளுடைய குண நலன்களை பார்க்கலாம்.
சர ராசி - தலைமை பண்பு , வேகம் , வளைந்து கொடுத்தல், சுதந்திர எண்ணம் , இடத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்ளுதல் , மற்றவர்களிடம் எளிதாக காரியம் சாதித்து கொள்ளுதல், இலக்கு மட்டுமே குறி , மன்னிக்கும் குணம்
ஸ்திர ராசி - ஸ்திர தன்மை , பிடிவாதம் , தலைக்கனம் , வேகம் இல்லா விவேகம் , அமைதி , இடத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்ள முடியாமல் தவித்தல், கருத்துக்களை மாற்றி கொள்ளாத நிலை , கடும் கோபம் , எதிரிகளை மன்னிக்காத குணம், கசப்பான சம்பவங்களை மறக்க முடியாத நிலை, வளைந்து கொடுத்த போக தெரியாத நிலை
உபய ராசி - சாந்தம் , அமைதி , கூச்சம் , திறந்த மனது , படித்து கொண்டே இருத்தல் , ஆராய்ச்சி எண்ணம் , பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்தல் , ஆன்மீக ஈடுபாடு , தத்துவ நிலை , பொன் பொருள் நாட்டமின்மை, மன்னிக்கும் குணம் , மறதி, இருவித எண்ணங்கள் , தடுமாற்றம்
இது தவிர , பொதுவாக , சர ராசிகள் அரசியலுக்கு ஏற்ற ராசிகள் என்றும் , ஸ்திர ராசிகள் கலைத்துறைக்கு ஏற்ற ராசிகளாகவும், உபய ராசி ஆராய்ச்சி படிப்பு , வேலைக்கு ஏற்ற ராசிகளாகவும் கூறப்படுவது உண்டு!
ஆண் ராசி / பெண் ராசி
ஆண் ராசிகள் -
மேஷம் , மிதுனம் , சிம்மம் , துலாம் , தனுசு, கும்பம்
ஆண் ராசிகளின் இயல்பு -
வெளிப்படை தன்மை , எதிரிகளை அழிக்கும் எண்ணம், ஆதிக்கம் செலுத்துதல் , சகஜமான பேச்சு ஆகிய சிலவற்றை கூறலாம்.
பெண் ராசிகள் -
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் , மீனம்
பெண் ராசிகளின் இயல்பு -
அமைதி , பராமரித்தல் , பாதுகாத்தல் , மனதில் உள்ளதை வெளிப்படுத்தாத இயல்பு , உணர்ச்சிவயப்படுத்தல் ஆகிய சிலவற்றை கூறலாம்.
பொதுவான குண நலன்களை தவிர , கிரகங்கள் ஆண் , பெண் ராசிகளில் இருப்பதை வைத்து , பிறக்க போகும் குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்பதை ஜோதிடர்கள் உபயோகிக்கும் பல வழிகளில் இதுவும் ஒன்று !
மேஷம் , மிதுனம் , சிம்மம் , துலாம் , தனுசு, கும்பம்
ஆண் ராசிகளின் இயல்பு -
வெளிப்படை தன்மை , எதிரிகளை அழிக்கும் எண்ணம், ஆதிக்கம் செலுத்துதல் , சகஜமான பேச்சு ஆகிய சிலவற்றை கூறலாம்.
பெண் ராசிகள் -
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் , மீனம்
பெண் ராசிகளின் இயல்பு -
அமைதி , பராமரித்தல் , பாதுகாத்தல் , மனதில் உள்ளதை வெளிப்படுத்தாத இயல்பு , உணர்ச்சிவயப்படுத்தல் ஆகிய சிலவற்றை கூறலாம்.
பொதுவான குண நலன்களை தவிர , கிரகங்கள் ஆண் , பெண் ராசிகளில் இருப்பதை வைத்து , பிறக்க போகும் குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்பதை ஜோதிடர்கள் உபயோகிக்கும் பல வழிகளில் இதுவும் ஒன்று !
Subscribe to:
Posts (Atom)
